புரோ கபடி லீக் ஆட்டத்தில் புதிய சீசனின் ஆட்டத்தில் அசத்திய ஜெய்ப்பூர் அணி.
11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே, ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில், இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.