டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அகமதாபாத்தில் தொடங்கிய பத்தாவது புரோ கபடி லீக் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.
பத்தாவது ப்ரோ கபடி லீக் போட்டி 12 அணிகள் உடன் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இறுதி லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச் குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நேற்றுடன் 129 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் ப்ரோ கபடி லீக் ஆட்டம் முடிவடைகிறது. இதில் நாளை இறுதிப்போட்டியில் புனே - உபி அணிகள், அரியானா - பெங்களூர் அணிகள் மோதுகின்றன.