புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசம், நொய்டாவில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா, புனே நகரில் நடந்தது. இந்நிலையில், பிளே ஆப் போட்டிகளில், உபி யோதாஸ் அணியின் வெற்றியை தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறியது. பாட்னா பைரேட்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது பிளே ஆப் போட்டியில், பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று, அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகளுடன் முதல் அரையிறுதி போட்டி நடக்கின்றது. தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதி நடைபெறுகிறது.