புரோ கபடி லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணியை 42-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியதன் பின்னர், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. தற்போது, மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
நேற்று இரவு 8 மணிக்கு நடந்த முதலாவது போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியுடன் மோதின. இந்த ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-38 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது. மற்றொரு போட்டியில், புனேரி பால்டன் அணி 56-18 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.