சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, ஐசிஎஃப்-ல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்தது. இதையடுத்து தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு, 2021-22-ம்- நிதியாண்டில் 3,101 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை ஐசிஎஃப்-ல் 2022-23-ம் நிதியாண்டில் 2,702 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
ஏசி மின்சார ரயில்களுக்கான 2 ரயில் தொடர்கள், 8 மின்சார ரயில் தொடர்கள், நெடுஞ்தொலைவு மின்சார ரயில்களுக்கான 3 தொடர்கள், 12 வந்தே பாரத் ரயில் தொடர்கள், 2,261 எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், டீசல் மின்தொடருக்கான 7 பெட்டிகள், ரயில்கள் ஆய்வுக்கான 11 பெட்டிகள், 5 விபத்து நிவாரண ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.