பேராசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் - யு.ஜி.சி 

March 11, 2023

பேராசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியில் சேரும் பேராசிரியர்கள் 2 ஆண்டு பயிற்சி காலத்தில் இருப்பார்கள். அப்போது அவர்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக செயல்பட முடியாது. இதன் காரணமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கான வழிகாட்டுனர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் 565-வது கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் […]

பேராசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் என யு.ஜி.சி அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியில் சேரும் பேராசிரியர்கள் 2 ஆண்டு பயிற்சி காலத்தில் இருப்பார்கள். அப்போது அவர்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக செயல்பட முடியாது. இதன் காரணமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கான வழிகாட்டுனர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் 565-வது கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி நடந்தது.

அந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் பேராசிரியர்கள் தங்களுடைய பயிற்சி காலத்திலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu