கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி லாபம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதயாண்டில், 104649 கோடி ரூபாய் மதிப்பில், பொதுத்துறை வங்கிகளின் லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஆண்டில், 66539.98 கோடியாக இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில், 57% லாப உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் லாபத்தில், எஸ்பிஐ வங்கியின் பங்களிப்பு மட்டுமே 50232 கோடி அளவில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச லாப வளர்ச்சியை பேங்க் ஆப் மகாராஷ்டிரா பதிவு செய்துள்ளது. இந்த வங்கி, கடந்த நிதி ஆண்டில் 126% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அடுத்தடுத்த நிலையில், யூகோ வங்கி 100%, பேங்க் ஆப் பரோடா 94% லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மேலும், இந்தியன் வங்கி, ஐஓபி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் கணிசமான லாப உயர்பை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் 27% சரிவை பதிவு செய்துள்ளது.