கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளின் லாபம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக மட்டுமே, இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வங்கிகளின் மூலதனத்தை மறுபயன்பாடு செய்தல், வாராக் கடனை குறைத்தல், கடன் வழங்கலை அதிகரித்தல் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2014 ஆம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் லாபம் 36270 கோடியாக இருந்தது. இது 2023 ஆம் நிதி ஆண்டில் 1.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.