திருப்பதியில் பக்தர்களுக்கு கைத்தடிகள் வழங்கும் விழா

September 7, 2023

திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்கு சிறுத்தை தாக்கி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று வயது சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். இதனால் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மதியம் 2 மணிக்கு மேல் அங்கு செல்ல அனுமதி இல்லை எனவும், காலை […]

திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

திருப்பதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்கு சிறுத்தை தாக்கி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று வயது சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். இதனால் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மதியம் 2 மணிக்கு மேல் அங்கு செல்ல அனுமதி இல்லை எனவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திருப்பதி திருமலை இடையே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கைத்தடிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை அறங்காவலர் கருணாகர ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கு கண்டிப்பாக விரைவில் ஒரு நிரந்தர தீர்வு காண்போம் என கூறியுள்ளனர். பக்தர்களுக்கு வழங்கும் கைத்தடி லட்சுமி நரசிம்மர் கோயிலை கடந்ததும் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தர்மா ரெடி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu