இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.149.93 கோடி மதிப்பீட்டில் 29 புதிய கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.149 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் 21 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சுற்றுச்சுவர் கட்டுதல், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, அமாவாசை மண்டபம், பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை, மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம், தார் சாலை, பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் போன்ற 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.