சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூரில் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளன.இதற்காக அரசு ரூபாய் 19.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.