வெள்ள நிவாரண நிதி வழங்க நெறிமுறை வெளியீடு

December 14, 2023

மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூபாய் 6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக ரூபாய் 6000 வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் நிவாரண நிதி வழங்குவது […]

மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூபாய் 6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக ரூபாய் 6000 வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரணத் தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும். டோக்கன் அனைத்தும் ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும் மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வரும் குடும்ப அட்டை தாரர்கள் எக்காரணம் கொண்டும் ரொக்க தொகை இல்லை என திருப்பி அனுப்பக்கூடாது. ரூபாய் 6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும். நிவாரணத் தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5:00 மணி வரையும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu