இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

June 24, 2024

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ராணுவப் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து சொல்லப்பட்டவர்களை மீட்க கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கானோரை பலி […]

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ராணுவப் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து சொல்லப்பட்டவர்களை மீட்க கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்ட இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். சர்வதேச நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றறை லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் வரலாற்றில் இத்தனை லட்சம் பேர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu