அமெரிக்காவில் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
குடியேற்ற ஒடுக்குமுறை, திருநங்கை உரிமைகள் நீக்கம், காசாவில் பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பிலடெல்பியா, கலிபோர்னியா, மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் நிர்வாகத்தையும், புதிய அரசாங்க செயல்திறன் தலைவர் எலான் மஸ்க்கையும், "அரசு திட்டம் 2025"-ஐயும் எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். பலர் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாகவும் சென்றனர்.