ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ரிமோர் லெஸ்தே விருது வழங்கி அந்நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் கௌரவித்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு டிமோர் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்தேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அவருக்கு அந்நாட்டின் உயரிய கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ரிமோர் லெஸ்தே விருது வழங்கி ஜோஸ் கௌரவித்தார்.
உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என இந்தியா நினைக்கிறது. கடின உழைப்பு மற்றும் நம்பிக்கைதன்மை ஆகியவற்றிற்காக இந்தியர்களை இந்த உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று முர்மு ஜோசிடம் கூறினார். இந்திய வம்சாவளியினர் ஒவ்வொரு துறையிலும் பங்கு பெற்று வருகின்றனர். இவர்கள் முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொள்வதால் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.