நிஜ்ஜார் கொலையில் இந்திய பங்கை நிரூபிக்க ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலை தொடர்பான வெளிநாட்டு தலையீட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து குற்றச்சாட்டுகளை உளவுத் தகவலின் அடிப்படையில் முன்வைத்ததாக தெரிவித்தார். ஜி 20 உச்சி மாநாட்டில் இதனை கேள்வி எழுப்புவதை தவிர்த்தோம். நாங்கள் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தோம். ஆனால் ஆதாரங்களை கண்டறியச் சேர்ந்து பணியாற்ற இந்தியா முன்வரவில்லை என கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் தகவல்களைச் இந்திய தூதரகம் சேகரிக்கிறது. இது கனடாவுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கும் எனவும், கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.