பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதனை 9.1 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகள் 10-ம் தேதி வெளியாகிறது. தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் எனும் திட்டத்தின் கீழ் துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.