மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பள்ளி மாணவ - மாணவிகள் புத்தகங்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்களை வழங்க தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் புதிய பாடத்திட்டங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தென் மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது எனக் குறித்து ஆலோசனை செய்ய முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.