ஜனவரி 1ஆம் தேதி காலை 9. 10 மணியளவில் பி.எஸ்.எல்.வி.சி0-58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து பி.எஸ்.எல். வி.சி -58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள தூசுக்கள் மற்றும் கருத்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய உள்ளன. மேலும் வெசாட் என்ற பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தில் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக ஒரு செயற்கைக்கோளை திருவனந்தபுரம் லால்பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் வடிவமைத்துள்ளனர். இந்த செயற்கைக்கோளுடன் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சிலவற்றையும் செலுத்தி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுண்டன் நாளை காலை 8.10 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் ராக்கெட்டிற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ள நிலையில் ராக்கெட் செயல்பாடு மற்றும் செயற்கைக்கோள் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.