பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சர்வதேச சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக்கென பிரத்யேகத் துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சர்வதேச மருத்துவ மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த மாநாடு , மாமல்லபுரம் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில், உலகசுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று மாநாட்டைத் தொடக்கிவைக்க உள்ளனர்.