கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்து சர்வீஸ் சாலை வழியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூபாய் 400 கோடி செலவில் புதிதாக தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய வகையில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கிளம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு,தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்களின் வசதிக்காக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் சர்வீஸ் சாலை வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்