துபாய் விமான நிலையம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில் கனமழை காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத்தில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல கார்கள், பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன. மெக்கா மற்றும் ஜெட்டா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை மற்றும் வானிலை மாற்றங்கள் சவூதி அரேபியாவில் கடுமையாக பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.