ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் பப்ளிக் அரையிறுதியில் கசாக்ஸை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. கஜகஸ்தானைச் சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்சின் ஆர்தர் கசாக்ஸுடன் மோதினார். முதல் செட்டில் 6-1 என்றும், இரண்டாவது செட்டில் 7-5 என்றும் வெற்றி பெற்ற பப்ளிக், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியுடன் அவர் அர்ஜென்டினாவின் ஜுவான் மேனுவல் செருண்டலோவை நாளைய இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.