மும்முனை மின்சாரம் 6 மணி நேரம் கிடைக்கும் விவரம் குறித்து அரசு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை 6 மணி நேரமும், அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.