புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் செல்லும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு தினசரி விமான சேவையை வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவை தொடங்க வேண்டும் என புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இண்டிகோ ஏர் நிறுவனம் ஹைதராபாத், பெங்களூர் இடையே விமானங்களை இயக்க முன்வந்துள்ளது. அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த இரண்டு நகரங்களுக்கும் விமான சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.