1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டி நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில் தற்போது வெயிலானது சுட்டெரித்து வருகிறது. 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது இந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும் காவலர் தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையங்களுக்காக அரசு பள்ளிகள் தேவைப்படும் காரணத்தினாலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை முன்கூட்டியே 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்து ஏப்ரல் 24-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.