மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தர் மற்றும் துணைவேந்தர் பொறுப்புகள் மாநில ஆளுநரால் வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பொறுப்புகளை மாநிலத்தின் முதல்வரே வகிக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில், நேற்று, இதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘தி பஞ்சாப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா 2023’ என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஷிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கான பணி நியமனங்களில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பல மாநிலங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில், வேந்தர் பதவியை ஆளுநருக்கு பதிலாக மாநிலத்தின் முதல்வரே வகிக்கும்படி இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இந்த சட்ட திருத்த மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.