பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் மந்திரி மொஹ்சின் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் மந்திரி மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மூன்று வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த நிர்வாக குழுவின் பதவிக்காலம் நான்காம் தேதி முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.