பஞ்சாப் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரை சந்தித்து பன்வாரிலார் புரோகித் வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.