அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்கள் கொள்முதல்- பாதுகாப்பு துறை

September 7, 2023

முப்படைகள் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன டிரோன்கள் கொள்முதல் செய்ய உள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவன தயாரிப்பான அதிநவீன 31 எம்கியூ -9 பி டிரோன்கள் முப்படைகள் பயன்பாட்டிற்கு தேவை என பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது ஜிஇ நிறுவனமும் இந்தியாவில் எச்ஏஎல் நிறுவனமும் இணைந்து விமானப்படைக்காக போர் விமான […]

முப்படைகள் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன டிரோன்கள் கொள்முதல் செய்ய உள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவன தயாரிப்பான அதிநவீன 31 எம்கியூ -9 பி டிரோன்கள் முப்படைகள் பயன்பாட்டிற்கு தேவை என பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது ஜிஇ நிறுவனமும் இந்தியாவில் எச்ஏஎல் நிறுவனமும் இணைந்து விமானப்படைக்காக போர் விமான என்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும், ஜி ஏ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த அதிநவீன டிரோன்கள் கொள்முதல் செய்வதற்காக அமெரிக்காவிற்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 3072 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கொள்முதல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu