விண்வெளியில் எடுக்கப்பட்ட பல ஆச்சரியமான புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், புதிதாக, ஊதா நிறத்தில் காணப்படும் செவ்வாய் கிரக புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தில், இரவு நேர பொழுதில் ஆரோராக்கள் தென்பட்டு உள்ளன. நாசாவின் MAVEN (Mars Atmosphere and Volatile EvolutioN) ஆர்பிட்டர் மூலமாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் அடர்ந்த ஊதா நிறம் தென்படுகிறதோ, அங்கு அதிகமான ஆரோராக்கள் இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் கடந்த மே 14 முதல் மே 20 வரை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.