புதுசேரியில்,பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், “அனைத்து பெயர்ப் பலகைகளையும் தமிழில் இருப்பதாக பார்த்துக்கொண்டால் அது பாவேந்தர் பாரதிதாசனுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். அரசு கட்டாயப்படுத்துவதைவிட குறிப்பிட்ட காலத்துக்குள் நாமே தமிழ் பெயர்ப்பலகை வைக்க முடிவு எடுப்போம் என கூறினார்.அனைத்து இடங்களிலும் தமிழ் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்பது பற்றி முதல்வருடன் ஆலோசித்து குறிப்பு தர ஆசைப்படுகிறேன். தமிழ் அனைத்து இடங்களிலும் பதிய வேண்டும். வாயில் நுழையாத பெயரை குழந்தைகளுக்கு வைக்காமல் தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும். நம் தாய்மொழியை பாராட்டப் பழகுவோம் என்று கூறினார்.