உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய நாட்டு தன்னார்வ படைக்கு தலைமை தாங்கும்படி வாகனர் குழுவின் முக்கிய தளபதி அன்ட்ரேய் ட்ரோஷேவுக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது உக்ரைனில் உள்ள தன்னார்வல படையினரை வழிநடத்தி செல்ல வாகனர் குழுவின் தளபதி ன்ட்ரேய் ட்ரோஷேவுக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் படை பிரிவுகளை ஏற்படுத்தி அவர்களை போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் வாகனர் குழுவின் பயன்பாடு ரஷ்ய படையினருக்கு தேவை என்பதை தெரிவித்துள்ளார். வாக்னர் குழு உக்ரைன் போரின் போது முக்கிய பகுதிகளை ரஷ்ய ராணுவத்திற்கு கைப்பற்றிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.