துனிசிய அதிபராக கைஸ் சையத் பதவி ஏற்கவுள்ளார்.
துனிஷியாவில் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற இந்த தேர்தலில், மொத்த வாக்குகளில் 28.8 சதவிகிதம் மட்டுமே பதிவாகியது. இதற்கிடையில், கையிஸ் சையத் 90.69 சதவிகித வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.














