உலக அளவில் தனிமை மிகப்பெரிய நோயாக மாறி வரும் சூழலில், ஆழ்ந்த உறக்கம் தனிமையைப் போக்க உதவும் என்ற ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 2300 பேரிடம் கருத்து கணிப்பு செய்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் இறுதியில், முறையான தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் உறங்குவது, ஆழ்ந்த உறக்கம் கொள்வது போன்றவற்றால் தனிமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என ஆய்வு முடிவு கூறுகிறது. குறிப்பாக, வயதானவர்களை விட இளைஞர்கள் மத்தியில் ஆழ்ந்த உறக்கம் தனிமைக்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.