இன்று ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் : உலக தலைவர்கள் பங்கேற்பு

September 19, 2022

பிரிட்டனில் ராணி 2ம்எலிசபெத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று நடைபெறுகிறது. இச்சடங்கு ஒரு மணி நேரம் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 70 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆட்சி செய்த ராணி எலிசபெத் 96-வது வயதில் மறைந்தார் . ராணியின் மறைவை அடுத்து, ஐக்கிய நாடுகள் முழுவதும் 11 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதில் உலகத் தலைவர்கள், பிரிட்டனின் அரச குடும்பம், மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகள், […]

பிரிட்டனில் ராணி 2ம்எலிசபெத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று நடைபெறுகிறது. இச்சடங்கு ஒரு மணி நேரம் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

70 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆட்சி செய்த ராணி எலிசபெத் 96-வது வயதில் மறைந்தார் . ராணியின் மறைவை அடுத்து, ஐக்கிய நாடுகள் முழுவதும் 11 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இதில் உலகத் தலைவர்கள், பிரிட்டனின் அரச குடும்பம், மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகள், இராணுவம், நீதித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இறுதிச் சடங்கின் போது, ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி அவரது கொள்ளுப் பாட்டி ராணி விக்டோரியாவின் சடங்கில் பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கி வண்டியில் கொண்டு செல்லப்படும் என்றும் அந்த வண்டியை 142 மாலுமிகள் வரிசையாக இழுத்துச் செல்வார்கள் எனவும் அரசு அறிக்கையில் ௯றப்பட்டுள்ளது. மேலும் ராணியின் இறுதிச் சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. ராணியின் உடல் கடந்து செல்லும் பாதையில், கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் இசையுடன் ௯டிய மரியாதை செலுத்துவார்கள். அதுமட்டுமன்றி ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் படைப்பிரிவுகள், கூர்க்காஸ் படை மற்றும் 200 இசைக்கலைஞர்களைக் கொண்ட ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியோர் இந்த ஊர்வலத்தை வழிநடத்துவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக நாடு முழுவதிலுமிருந்து 2,000க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்பு க௫தி வரவழைக்கப்பட்டுள்ளனர். இறுதிச் சடங்கு முடிந்ததும் ராணியின் உடல் வின்ட்சர் கோட்டையில், அவரது குடும்பத்தார் முன்னிலையில். அடக்கம் செய்யப்படும் என ௯றப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா மற்றும் வடகொரியா தலைவர்களுக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu