ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்லிகார்ஜூனே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று மாலையில் புதிய காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் போது ராகுல் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது














