காங்கிரஸ் செயற்குழு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்குமாறு கட்சி மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. பின்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்