ஐரோப்பாவிற்கு 5 நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆன ராகுல் காந்தி ஐரோப்பாவிற்கு சென்று அங்கு முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்கிறார். அதில் நாளை ஐரோப்பிய ஆணைய எம்பிக்களை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே செப்டம்பர் 8 ஆம் தேதி உரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு இந்திய வம்சாவளி பிரதிநிதிகளை சந்தித்து பேசி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.