காங்கிரஸ் முன்னாள் தலைவர் காந்தி தொடங்கிய பாத யாத்திரையில் கடந்த 12 நாளில் அவர் 225 கி.மீ. கடந்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,750 கி.மீ., தூர பாத யாத்திரை ராகுல் மேற்கொண்டுள்ளார். 50 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த பாத யாத்திரை இன்று 13வது நாளை எட்டியுள்ளது. ஆலப்புழாவின் செர்தாலா என்ற இடத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மரக்கன்றை நட்டு வைத்து ராகுல் யாத்திரை துவக்கினார். 14 கி.மீ., தூரம் நடக்கும் ராகுல், குதியதோடு என்ற இடத்தில் மதியம் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
இதில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முரளீதரன், பவன் கேரா, வி.டி.சதீசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாத யாத்திரையில் இணைந்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 12 நாட்களாக நடக்கும் பாத யாத்திரையில் 225 கி.மீ., தூரம் ராகுல் கடந்துள்ளார். இன்று 15 கி.மீ., தூரம் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல், இரவு கொச்சி சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.