ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அதில் மோடி என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தது. மேலும் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேல்முறையீடு செய்ய வசதியாக ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.