இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல் விடுப்பு

October 21, 2022

புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல் விடுப்பு எடுக்கவுள்ளார். கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். குமரி முதல் இமயம் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான […]

புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல் விடுப்பு எடுக்கவுள்ளார்.

கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். குமரி முதல் இமயம் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அதில் சசிதரூரை தோற்கடித்து மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். இவர் வரும் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகை விடுமுறையொட்டி, இந்திய ஒற்றுமை பயணத்திற்கு சற்று ஓய்வு அளிக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். எனவே 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் ராகுல் காந்தி டெல்லியில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. 26ஆம் தேதி பதவியேற்பு விழாவை முடித்துக் கொண்டு, மீண்டும் ஆந்திர மாநிலத்திற்கு திரும்பி விட்ட இடத்தில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu