2024 ஆம் வருட புதிய கால அட்டவணையை ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரெயில்வே துறையில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவதுடன், 2024-ம் ஆண்டுக்கான புதிய கால அட்டவணை சில காரணங்களால் தள்ளிப்போய், தற்போது ஜனவரி 1-ந்தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. இதில் புதிய ரெயில்கள், சேவை நீட்டிப்புகள் மற்றும் வேக உயர்வு போன்ற அம்சங்கள் உள்ளன.
ஆகஸ்டு 31-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரெயில், மார்ச் 12-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மைசூர் வந்தே பாரத் ரெயில் மற்றும் 8 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 19 ரெயில்களின் வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், 14 ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டு, 45 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைவிட முக்கியமானது, 56 அதிவிரைவு ரெயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.