ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல் நிகழ்ச்சியில் மதியம் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். மேலும் ஒடிசாவின் பூரி மற்றும் ஹவுரா இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின் பூரி மற்றும் கட்டாக் ரெயில்வே நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.