மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு, மாஸ்கோவில் இந்தியா-ரஷியா ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின், ராஜ்நாத்சிங் ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இதற்கிடையில், ராஜ்நாத்சிங் கூறுகையில், "நமது நாடுகளின் நட்புறவு மிக உயர்ந்த மலையைவிட உயர்ந்தது, ஆழமான கடலைவிட ஆழமானது. இந்தியா எப்போதும் ரஷியாவுக்கு துணை நிற்கும், எதிர்காலத்திலும் இதே தொடரும்" என்று தெரிவித்தார்.