ராஜ்யசபை மார்ச் 13-ந்தேதி வரை ஒத்திவைப்பு

February 13, 2023

தொடர் அமளி காரணமாக ராஜ்யசபை மார்ச் 13-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை இன்று 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி காலை 11.50 மணியளவில் முதலில் அவை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். 2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி […]

தொடர் அமளி காரணமாக ராஜ்யசபை மார்ச் 13-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை இன்று 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி காலை 11.50 மணியளவில் முதலில் அவை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். 2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu