பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொள்ள வருவதற்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கத்திலும், மறுநாள் ராமேஸ்வரத்திலும் வருகை தர உள்ளார்.
பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் 20-ம் தேதியும், ராமேஸ்வரம் கோயிலில் 21ஆம் தேதியும் தரிசனம் செய்ய உள்ளார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ராமேஸ்வரத்தில் இருந்து மோடி திரும்ப செல்லும் வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.