ஐந்து நாட்களாக நடந்து வந்த ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 3500 மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றன. இதன் மூலம் 10000 மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தொழிலாளர் வேலை இன்றியும், வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிய நவீன படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய ரக போராட்டம் இன்றும் தொடர் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி பெற்று இன்று கடலுக்கு செல்கின்றனர்.