ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகுகளை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடலில் எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளையும் அந்நாட்டு அரசுடைமையாக்கி வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து, மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர், ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறப்பிடிக்கப்பட்டு அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு எண்ணல்களுக்கு ஆளாவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.