ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்

February 5, 2024

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 23 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களை 2 விசை படகுடன் கைது செய்தனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு வருகிற 14-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு விசை படகுகளும் […]

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 23 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களை 2 விசை படகுடன் கைது செய்தனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு வருகிற 14-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுத்து மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர் சங்கங்களும், மீனவர்களின் உறவினர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளனர். அதன்படி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu